ஆபாச படம் எடுத்து சிறுமிக்கு மிரட்டல் பட்டதாரி கைது

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிறுமியை, ஆபாச படமெடுத்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பி.டெக் பட்டதாரி சாய் (எ) சிவசுந்தரம் என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. லேப்டாப் மற்றும் செல்போனை சோதனை செய்ததில் சிறுமி மட்டுமில்லாமல் மேலும் 11 பெண்களை மிரட்டி சாய் பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.  இதுதொடர்பாக போலீசார் சாயிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: