ஓசூர்: ஓசூர் அருகே தமிழக எல்லை பகுதியில் கர்நாடக மாநில கொடியுடன் நுழையும் போராட்டத்தில் கன்னட அமைப்புகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த மாதம் கர்நாடக மாநில கொடியை டெம்போ டிராவலரில் கட்டிக் கொண்டு கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் தமிழகத்திற்குள் வந்தனர். 10 அடி உயரத்திற்கு கொடி கட்டி வந்த அவர்களை கிருஷ்ணகிரி மற்றும் கோவையில் போலீசார் தடுத்து நிறுத்தி, அதிக உயரத்திற்கு கொடி கட்டி செல்ல வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், அவர்களை தமிழக போலீசார் தாக்கியதாக கூறி நேற்று கன்னட அமைப்புகளான கர்நாடக ரக்சன வேதிகே, கன்னட ஜாக்ருதி வேதிகே உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் டூவீலரில் கர்நாடக கொடிகளை கட்டிக்கொண்டு,