கமுதி: ராமநாதபுரம், கமுதி பகுதி சாலைகள் விளைபொருட்களின் உலர்களமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கமுதி பகுதியில் இந்த ஆண்டு நன்றாக மழை பெய்ததால் நெல், கம்பு, சோளம், குதிரைவாலி, உளுந்து, மிளகாய் போன்றவை நன்றாக விளைச்சல் காணப்படுகிறது. குதிரைவாலி, கம்பு, சோளம் போன்றவற்றை சாலையின் நடுவே போட்டு பயிரில் இருந்து பிரித்தெடுக்கின்றனர். இதனால் கமுதி-சாயல்குடி செல்லும் சாலை சாலையே தெரியாத அளவிற்கு உலர்களமாக மாறி வருகிறது.