உள்ளாட்சி தேர்தல் வாக்காளர்களுக்கு இந்திய கம்யூ. நன்றி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அரசின் ஒரு பிரிவு போல் செயல்படுவது நீதிமன்றத்தில் வெளிப்பட்டது. தொடர்ந்து ஆளும் கட்சியின் அழுத்தங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் ஆளாகியதை தேர்தல் நடைமுறைகளும் வெளிப்படுத்தியுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆளும் கட்சியினர் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியின் விருப்பம் போல் சில இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தடைகள், இடையூறுகளை தாண்டி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து மகத்தான வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும் ஆயிரமாயிரம் தொண்டர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: