சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளைாயாட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை மாநில கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி, உடல் ஆரோக்யமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம் என்று தெரிவித்தார். இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மிக முக்கியம் என்றும், பொதுமக்களும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி வலியுறுத்தினார்.
