சென்னை: உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ெசன்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக செயலாளர் சத்தியமூர்த்தி நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து பொது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி குறித்து தரக்குறைவாக பேசினார்.