புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கைதான 14 மாத குழந்தையின் தாயை விடுவிக்க வேண்டுமென பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் 19ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, ஏக்தா - ரவிசேகர் தம்பதியினர் உட்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர். ஏக்தா - ரவி சேகர் தம்பதியினர் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றனர். கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால், இவர்களின் 14 மாத பெண் குழந்தை பெற்றோர் இன்றி தவித்து வருகிறது.