ஆம்பூர்: ஆம்பூர் வளையல்கார தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ராகுல்(11). அங்குள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் ராகுல் தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த வெறிநாய் ஒன்று ராகுலை விரட்டியடித்தபடி கை, விரல்கள் மற்றும் முகத்தின் ஒரு பகுதியை கடித்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ராகுலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனையில் இருந்த சிலர் ராகுலிடம், ‘ஊசி வாங்கி வா’ என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே இருந்த கடைக்குச் சென்று ஊசி வாங்கிவந்து தந்துள்ளனர்.