நாசா விண்வெளி ஆய்வு மையமானது 2020 ஆம் ஆண்டில் புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது. இந்நிலையில் குறித்த ரோவரின் புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளது நாசா. இந்த ரோவர் ஆனது செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஏலியன்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பதிலாக மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பில் ஆராயவுள்ளது. அதாவது செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.