காளையார்கோவில்: காளையார்கோவில் தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் நாய் மற்றும் கால்நடைகளால் பொதுமக்கள் அதிகளவில் விபத்துகளை சந்திக்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் வெறிநாய்களை பிடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காளையார்கோவிலில் உள்ள வீதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றது. இதனால் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்பவர்கள் பொருட்கள் வாங்குவதற்கு வாகனங்களில் செல்லுபவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை துரத்தி வந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடிக்கின்றன. இதனால் மில் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் வேலைக்குச் செல்வதற்கு அச்சப்படுகிறார்கள்.