தேன்கனிக்கோட்டை: பருவநிலை மாற்றத்தால், தேன்கனிக்கோட்டையில் பூ விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளது. தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில், சொட்டுநீர் பாசன முறையில் ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் வடகிழக்கு மழையால், செடிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டு இழைகள் உதிர்ந்தும், பூக்கள் விளைச்சல் குறைந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து, கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், ரோஜா செடிகளில் இதழ்கள் வாடி விழுந்து, பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது.