குழந்தை இயேசு ஆலய விழா

திருவொற்றியூர்: மணலி புது நகரில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் 40ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு திருக்கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மந்திரிக்கப்பட்டது.  பின்னர், சாம்பிராணி தூபமிட்டு மயிலை முன்னாள் மறை மாவட்ட பேராயர் சின்னப்பா, திருக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த கிறிஸ்துவர்கள் மரியே வாழ்க என முழங்கினர். 9 நாள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஜனவரி 4ம் தேதி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் செய்துள்ளது.

Related Stories: