புதுடெல்லி: இந்தாண்டிற்கான இந்திய வனத்துறை அறிக்கையை வெளியிட்டு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று பேசியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டில் மொத்தமுள்ள மரங்கள், வனப்பகுதியின் அளவு 5,188 சதுர கிலோ மீட்டர் பெருகி உள்ளது. நிலக்கரி இருப்பும் 42.6 மில்லியன் டன் அதிகரித்துள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டு வனத்துறை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை விட உயர்ந்துள்ளது.