வாக்கு எண்ணிக்கையை ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

மதுரை: வாக்கு எண்ணிக்கையை ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யக் கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ஆஜராக உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை சிறிது நேரத்துக்கு ஒத்திவைத்தார். வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவுசெய்ய வேண்டும் என்று ஏற்கனவே விதிமுறைகள் உள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

Related Stories: