புனே: ‘பாரத் மாதா கி ஜே’ என கூறுபவர்கள் மட்டும் இந்தியாவில் வாழலாம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது; யார் வேண்டுமானாலும் வந்து தங்கியிருக்க இந்தியா ஒன்றும் சத்திரமல்ல. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் இந்த நாட்டின் நலனுக்கு எதிரானவர்கள்.