சென்னை: இயந்திர கோளாறை உரிய நேரத்தில் கண்டுபிடித்த விமானியின் சாமர்த்தியத்தால் 183 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை 4.05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 177 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உட்பட 183 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் இருந்து பறக்க தயாரானது. விமானம் பறக்க தொடங்குவதற்கு முன்னதாக விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. உடனே விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.