ஆலந்தூர்: வன்னியர் குல சத்ரிய மகா சங்கத்தின் 131ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆலந்தூர் பகுதியில் உள்ள பாடசாலையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் எஸ்.லிங்கமூர்த்தி தலைமை வகித்தார். துணை தலைவர் ஹரி ராமன், செயலாளர்கள் கணேசன், மணவாளன், பொருளாளர் பகத்சிங் முன்னிலை வகித்தனர். குழு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐஜி அறிவுச்செல்வன் கலந்துகொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.