விருதுநகர் ராமகிருஷ்ணாபுரத்தில் காமராஜர் சிலையை அவமதித்த நபர்களை கைது செய்யாதது கண்டனத்திற்குரியது: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: விருதுநகர் ராமகிருஷ்ணாபுரத்தில் காமராஜர் சிலையை அவமதித்த நபர்களை கைது செய்யாதது கண்டனத்திற்குரியது என கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். பெருந்தலைவர் காமராஜர் சிலையை அவமதித்து இழிவுபடுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து  நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி நடவடிக்கை  எடுக்க தவறினால் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: