சென்னை: சென்னையில் கத்தி முனையில் தொழிலதிபரை கடத்தி ரூ.35 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த முகேஷ் என்பவர், அம்பத்தூரில் லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு வில்லிவாக்கம் சென்ற முகேஷை அவரது காரில் வைத்தே பிரபல ரவுடி தில் பாண்டி மற்றும் அவரின் கூட்டாளிகள் கடத்தி சென்றுள்ளனர். காரை கோயம்பேட்டை நோக்கி ஒட்டி சென்ற அவர்கள் முகேஷியிடம் ரூ.25 லட்சம் தரும் படி அடித்து துன்புறுத்தி உள்ளனர்.