டோக்ரா இரட்டை சதம் வெற்றி விளிம்பில் புதுச்சேரி:
கொல்கத்தா: புதுச்சேரி-மிசோரம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை லீக் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் மிசோராம் 73ரன்னுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய புதுச்சேரி நேற்று முன்தினம் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்திருந்தது. நேற்று களத்தில் இருந்த அருண் கார்த்திக் 86ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து பரஸ் டோக்ராவுடன் ஜோடி சேர்ந்த சுரேஷ்குமார் அதிரடியாக விளையாடினார். டோக்ரா இரட்டை சதம்(200ரன்) அடித்து ஆட்டமிழந்தார். கூடவே சுரேஷ்குமார் ஆட்டமிழக்காமல் 86 பந்துகளில் 103 ரன் அடிக்க புதுச்சேரி வலுவான எண்ணிக்கையை எட்டியது. அதனையடுத்து புதுச்சேரி 86ஓவரில் 5 விக்ெகட் இழப்புக்கு 458 ரன்னுக்கு முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. எனவே 2வது இன்னிங்சை தொடர்ந்த மிசோரம் நேற்று மாலை ஆட்ட நேர முடிவில் 11ஓவருக்கு 4 விக்கெட் இழந்து 30 ரன் எடுத்துள்ளது. இன்னும் 6 விக்கெட்கள் கைவசம் இருந்தாலும் 355 ரன் பின்தங்கியுள்ள மிசோராம் இலக்கை எட்டுவது சிரமம். அதனால் புதுச்சேரி ஹாட்ரிக் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.