திருச்சி: அரசு தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது தொடர்பாக அக்கா, தங்கையிடம் விரைவில் விசாரணை நடத்த திருச்சி போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை குறுக்கெழுத்து தேர்வு மையம் சார்பில் அரசு தேர்வு கடந்த பிப்ரவரியில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடந்தது. திருச்சிக்கான மையம் அரியமங்கலம் எஸ்ஐடியில் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு தேர்வு எழுத மதுரையை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது. இதில் ராமலட்சுமிக்கு பதிலாக அவரது தங்கை மீனாட்சி தேர்வு எழுதி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.