ஒசூர்: ஓசூரில் சொட்டு நீர் பாசனத்தில் விவசாயிகள் பீன்ஸ் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, சின்னபேளகொண்டப்பள்ளி, சூளகிரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பசுமைக்குடில்கள் அமைத்து பூக்கள் சாகுபடி செய்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதமாக விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்திற்கு மாறி வருகின்றனர். இதில் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளுக்கு அடுத்த படியாக பீன்ஸ் சாகுபடியில் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.