திருவொற்றியூர்: எண்ணூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அர்ச்சனா (28). நேற்று காலை பார்த்தசாரதி வேலைக்கு சென்று விட்டார். அர்ச்சனா மற்றும் அவரது மாமியார் லட்சுமி ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது சமையல் செய்வது தொடர்பாக அர்ச்சனாவுக்கும், அவரது மாமியார் லட்சுமிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் இது குடுமிப்பிடி சண்டையாக மாறி இருவரும் கட்டிப்புரண்டனர். ஆத்திரமடைந்த அர்ச்சனா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாமியாரின் தலையில் குத்தினார்.