சென்னை: புரசைவாக்கம் பொன்னன் 3வது தெருவை சேர்ந்தவர் யமுனா (40). இவர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தனது குழந்தைளுக்கு துணிகள் எடுக்க நேற்று முன்தினம் இரவு புரசைவாக்கத்தில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சென்றார். அங்கு, துணிகளை எடுத்துவிட்டு பில் போடும்போது, அவர் வைத்திருந்த பையில் இருந்து பர்ஸ் மாயமாகி இருந்தது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த யமுனா, துணிக்கடையின் மேலாளரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, இளம்பெண் ஒருவர் யமுனாவிடம் இருந்து பர்சை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.