விருதுநகர்: திருச்சுழி அருகே, அம்மன்பட்டி கிராமத்தில் 300 பேருக்கு இரட்டை வாக்குரிமை இருப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். அவை ஆளுங்கட்சிக்கு ஆதரவான வாக்குகள் என்பதால், அதிகாரிகள் நீக்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள அம்மன்பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டி தலைமையில் சிலர், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். பின்னர் மருதுபாண்டி கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா மண்டலமாணிக்கம் ஊராட்சியில் உள்ள முத்துப்பட்டி கிராமத்தையும், விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வேலானுரணி ஊராட்சியில் உள்ள அம்மன்பட்டி கிராமத்தையும் ஒரே சாலைதான் பிரிக்கிறது. முத்துப்பட்டியைச் சேர்ந்த 300 பேருக்கு அம்மன்பட்டியிலும், முத்துப்பட்டியிலும் ஓட்டு உள்ளது. இதுகுறித்து விஏஓ, வாக்குச்சாவடி பூத் அலுவலர், திருச்சுழி தாசில்தார் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமான மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.