சென்னை: போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வரும் கீர்த்திகா (27), பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், எனக்கும், மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக பணிபுரிந்து வரும் சூரியபிரகாஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது. திருமணத்தின்போது அதிக நகைகள் வரதட்சணையாக கொடுத்து எனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், எனது கணவரின் நடவடிக்கை சரியில்லாததால், அதுபற்றி அவரிடம் கேட்டேன். இதனால், என்னை அடித்து உதைத்து, குழந்தையுடன் வீட்டில் இருந்து விரட்டி விட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அதில் தெரிவித்து இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கீர்த்திகாவின் கணவர் சூரிய பிரகாஷ் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
ஸ்ரீ அண்ணாநகரை சேர்ந்த கல்லூரி மாணவன் சரவணலோகன் (21), நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையம் வந்தபோது, பைக்கில் வந்த 2 பேர், இவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.