பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி குமாரி. தம்பதியின் மகன் சவுந்தர் (37). குடிபோதைக்கு அடிமையான சௌந்தர் வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுவது, கடைகளில் வேலை செய்வது என அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை கணேசபுரம் அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள பிளாட்பாரத்தில் சவுந்தர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கிடமான நபர் செல்வது தெரிய வந்தது. விசார்ணையில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலை பகுதியில் பிளாட்பாரத்தில் தங்கி கூலி வேலை செய்து வரும் தேவராஜ் (53) என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று காலை சொந்த ஊரான பண்ருட்டியில் சுற்றிவளைத்து பிடித்தனர்.