சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: இந்த சட்டத்திருத்தத்தால் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டடார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே? எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை பிரதமர் மோடி மற்றும், அமித்ஷா, மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதை அப்படியே அடிபணிந்து காலில் விழுந்து ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருப்பவர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் அதிமுக எம்பிக்கள் தமிழின துரோகிகள் ஆகிவிட்டனர். அவர்களை தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள். சட்டத்திருத்த விவகாரத்தில் திமுகவை, பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளதுடன், திமுகவை கண்டித்து வரும் 20ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறாரே?
அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு அதிமுக எம்பிக்கள் தமிழின துரோகிகள்: தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள் என மு.க.ஸ்டாலின் பேட்டி
- பாராளுமன்ற உறுப்பினர்கள்
- அஇஅதிமுக
- தமிழ்நாடு
- துரோகிகள்
- எம்.கே.ஸ்டாலின் குடியுரிமை
- எம்.கே. ஸ்டாலின்
- சட்ட திருத்த மசோதா, ஆதரவு அதிமுக எம்.பி.
- தமிழ்