சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து விக்கிரமராஜா தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆன்லைன் வணிகத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மற்றும் மாவட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சாமுவேல் வரவேற்றார். பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பேரமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு சங்கங்களை சார்ந்த தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, இந்திய வணிகத்தை முற்றிலும் சீரழிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆர்ப்பாட்டம்: விக்கிரமராஜா தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
- வணிகர் சங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆன்லைன் வணிகத்தை நிரூபிக்கிறது: ஆயிரக்கணக்கான விக்ரமராஜா தலைமைத்துவ தொழிற்சங்கம்