சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் அறிக்கை சமர்ப்பிக்க ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என மாவட்ட அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும்.