கரூர்: சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து கணக்குகளை தாக்கல் செய்வது கட்டாயமாக இருந்தது. இதனால் அவர்கள் எவ்வளவு சொத்து வைத்துள்ளனர் என அடுத்த முறை தேர்தலில் போட்டியிடும்போது எல்லாம் தெரிந்து விடும். அதேபோலத்தான் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் சொத்துக் கணக்குகளை காட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வேட்பு மனுவுடன் ‘3ஏ’ என்ற உறுதி படிவமும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் உள்ளாட்சி வேட்பாளர்கள் தங்களது சொத்துக்கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இந்த தகவல் மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது.