ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் குல்பதீன் நயிப். உலக கோப்பை தொடரில் ஆப்கான் அணி ஒரு வெற்றிக் கூட பெறாததையடுத்து கேப்டன் பொறுப்பில் இருந்து நயிப் நீக்கப்பட்டார். ஆனால் அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக டூவிட்டரில் அவர் வெளியிட்டு வரும் கருத்துகள் ஆப்கான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது. குல்பதீன், ‘ ஆப்கான் மக்களே கிரிக்கெட் வாரியம், வீரர்கள் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. கிரிக்கெட் விளையாட்டில் உள்ள ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதால் பேசுகிறேன். முன்பே ஏன் பேசவில்லை என்று கேட்கலாம், ‘அப்போது கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தவறுகளை சரி செய்கிறோம்’ என்று உறுதி அளித்தனர். அதனால் அமைதியாக இருந்தேன். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.