சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக கருணாஸ் கூறினார். முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் முதல்வர் பழனிசாமியை நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வரை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தேன். தனிமனித செல்வாக்கு அடிப்படையில் அதிமுக கூட்டணியே அதிக இடத்தில் வெற்றி பெறும். தேவைப்பட்டால் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.