சென்னை: திருச்சி ஸ்ரீ ரங்கநாதசாமி கோயில் மிகவும் பழமையானது. இந்நிலையில் கோயிலில் இருந்த உற்சவர் மற்றும் மூலவர் சிலைகள் கடந்த 2012 மற்றும் 2017ம் ஆண்டு மாயமானது. மேலும், கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. மாயமானதாக கூறப்படும் காலத்தில் ஸ்ரீரங்கம் கோயில் இந்து அறநிலையத்துறை சார்பில் சீரமைக்கப்பட்டது. இதற்கிடையே ஸ்ரீரங்கம் கோயிலில் மாயமான சிலைகள் குறித்து திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் புகார் அளித்தார். மேலும், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். வழக்கை விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் சிலைகள் மாயமானது குறித்து விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 6 மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டது.