தேனி: மேகமலைப் பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார். வேகமான காற்று வீசும் மலைகள் என்றும் அழைக்கப்படும் மேகமலை, கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலையில், தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் இங்கு 100க்கும் மேற்பட்ட பறவையினங்களைக் காண முடியும். இந்த மலைப்பகுதியில் உள்ள பல்லுயிர் தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேகமலைப் பகுதியை சூழல் சுற்றுலாத் தலமாக அறிவிக்குமாறு மத்திய அரசை தேனி தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.