மணப்பாறை: மணப்பாறை அருகே அரசுப் பள்ளிக்கு மாணவன் குதிரையில் செல்கிறார். இயற்கை மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க 12 வயது சிறுவன் முயற்சி மேற்கொண்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வாடிபட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். தனியார் வங்கியில் ஊழியராக பணி புரியும் இவர், இயற்கை விவசாயம் பாரம்பரியமிக்க குதிரை பயணம் போன்ற கலாச்சாரங்களை பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பொது மக்களுக்கு ஆலோசனை, பயிற்சிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் மகன் அழகர்சாமி(12) தேனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் இவர்,