திருவில்லிபுத்தூர்: கௌசிக ஏகாதசியை முன்னிட்டு, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு 108 புடவை சாத்தும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கௌசிக ஏகாதசியை முன்னிட்டு, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்களுக்கு கார்த்திகை மாதத்தில் 108 பட்டுப் புடவைகள் சாத்தும் வைபவம் நேற்று நடந்தது. இதையொட்டி ஆண்டாள், ரங்கமன்னார், பெரியபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்கள் ஆகியோர் கோபால விலாச மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.