புதுடெல்லி: நைஜீரியா அருகே, ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் நேற்று முன்தினம் கடத்திச் சென்றனர். இதில் 18 இந்தியர்கள் உட்பட 19 பேர் உள்ளனர். இவர்களை மீட்பதற்கான முயற்சியில், நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது. ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த ‘விஎல்சிசி நேவி கான்ஸ்டெல்லேஷன்’ என்ற கப்பல் நைஜீரியா வழியாக நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. இதில் மொத்தம் 19 பேர் இருந்தனர். இவர்களில் 18 பேர் இந்தியர்.