மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி சிறப்பாக செயல்படுத்திய தமிழக அரசுக்கு விருது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

புதுடெல்லி: டெல்லி விக்யான் பவனில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் நேற்று இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். இதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறும்போது, “மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு டெல்லியில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில் விருது வழங்கப்பட்டது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இந்தியாவிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் வழங்குவதில் தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தெரிவித்து, அதற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: