பொருட்கள் சீக்கிரம் தராததால் கடைக்காரருக்கு பிளேடு வெட்டு: ஆசாமிக்கு வலை

பல்லாவரம்: பம்மல், நாகல்கேணி பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருபவர் மோகன்ராம் (25). இவர், நேற்று தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, கடைக்கு வந்த பம்மல் நாகல்கேணி ஆதாம் நகர் 1வது தெருவை சேர்ந்த குணா (எ) குணசேகரன் (27), தனக்கு சீக்கிரம் பொருட்கள் தருமாறு மோகன்ராமிடம் கேட்டுள்ளார். அதற்கு மோகன்ராம், ‘‘ஒவ்வொருவராகத்தான் பொருட்கள் தர முடியும், விருப்பம் இருந்தால் வாங்குங்க.. இல்லையென்றால் வேறு கடையை பார்த்து போங்க...’’ என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன், ரகளையில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த பிளேடால் மோகன்ராம் முகத்தில் கிழித்துவிட்டு தப்பியோடினார். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குணசேகரனை தேடி வருகின்றனர்.

Related Stories: