பல்லாவரம்: பம்மல், நாகல்கேணி பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருபவர் மோகன்ராம் (25). இவர், நேற்று தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, கடைக்கு வந்த பம்மல் நாகல்கேணி ஆதாம் நகர் 1வது தெருவை சேர்ந்த குணா (எ) குணசேகரன் (27), தனக்கு சீக்கிரம் பொருட்கள் தருமாறு மோகன்ராமிடம் கேட்டுள்ளார். அதற்கு மோகன்ராம், ‘‘ஒவ்வொருவராகத்தான் பொருட்கள் தர முடியும், விருப்பம் இருந்தால் வாங்குங்க.. இல்லையென்றால் வேறு கடையை பார்த்து போங்க...’’ என்று கூறியுள்ளார்.