புதுடெல்லி: நாட்டில் 6 தடயவியல் ஆய்வு கூடங்களை விரைவில் நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. சண்டிகர், ஐதராபாத், கொல்கத்தா, போபால், புனே மற்றும் கவுகாத்தியில் அமைந்துள்ள மத்திய அரசின் தடய அறிவியல் ஆய்வகங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடுமையான மற்றும் கொடூரமான குற்றச்சம்பவங்களில் செயல் திறன்மிக்க மற்றும் அறிவியல் ரீதியிலான விசாரணையை எளிதாக்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.