போபால்: பாஜ எம்பி பிரக்யா சிங், ‘‘நேரில் வர்றேன், கொளுத்துங்க பார்ப்போம்...’’ என காங்கிரஸ் எம்எல்ஏக்கு பதிலடி கொடுத்துள்ளார். மக்களவையில் கடந்த 27ம் தேதி ‘கோட்சே தேச பக்தர்’ என பாஜ எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரக்யா சிங்கை தீவிரவாதி என்றார். மேலும், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ கோவர்தன் டான்கி, ‘பிரக்யா சிங்கின் உருவ பொம்மையை மட்டுமல்ல, அவர் இங்கு வந்தால் உயிரோடு எரித்து விடுவேன்,’ என்று ஆவேசமாக கூறினார். பின்னர், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக பிரக்யா சிங் தனது கருத்துக்காக மக்களவையில் மன்னிப்பு கோரினார். அதேபோல், பிரக்யாவை மிரட்டியதற்காக எம்எல்ஏ கோவர்தனும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.