சூரத்: சையத் முஷ்டக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் இன்று சூரத்தில் நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் தமிழ்நாடு-ராஜஸ்தான், அரியானா-கர்நாடகா அணிகள் மோத உள்ளன. பி பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிப்பெற்று சூப்பர் லீக் சுற்றுக்குள் முன்னேறியது. அதே பி பிரிவில் இடம் பெற்றிருந்த ராஜஸ்தான் 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று சூப்பர் லீக் சுற்றில் நுழைந்தது. சூப்பர் லீக் சுற்றின் பி பிரிவில் மும்பை, ஜார்கண்ட், பஞ்சாப் அணிகளை வீழ்த்தியும், கர்நாடகா அணியிடம் தோற்றும் தமிழ்நாடு அரையிறுதிக்கு முன்னேறியது. சூப்பர் லீக் சுற்றின் ஏ பிரிவில் பரோடா, மகராஷ்டிரா, டெல்லி அணிகளை வீழ்த்தியும் பரோடா அணியிடம் தோற்றும் ராஜஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் ேபாட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இரண்டு அணிகளும் இன்று களம் காண உள்ளன.