வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த அக்டோபர் 26ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். அதிகாரிகள் உறுதியையடுத்த்து 11 நாளுக்குப்பின் கடந்த 5ம் தேதி உண்ணாவிரதத்தை கைவிட்டார். நளினியை தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த முருகனும் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.