மாநிலத்தின் முதல்வராவேன் என ஒருபோதும் கனவு கண்டது இல்லை, சோனியா காந்திக்கும் மற்றவர்களுக்கும் நன்றி: உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்ட்ரா முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் சோனியா காந்திக்கு உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை என்சிபி- காங்கிரஸ்- சிவசேனா ஆகிய 3 கட்சிகளை கொன்ட மகா ஆகாஸ் விகாதி ஒருமனதாக தேர்வு செய்துள்ளது. மாநிலத்தின் முதல்வராவேன் என ஒருபோதும் கனவு கண்டது இல்லை; சோனியா காந்திக்கும் மற்றவர்களுக்கும் நன்றி என கூறியுள்ளார். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து தேசத்துக்கு புதிய பாதையை காட்டியுள்ளோம் எனவும் கூறியுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் ஆளுநரை சந்தித்து உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

Related Stories: