சென்னை: ஆம்பளையா என்று ஓபிஎஸ்சை குறிப்பிட்டு நான் சொல்லவில்லை. பொதுவாக அதிமுககாரர்களை பற்றி அப்படி சொன்னேன் என தனது சர்ச்சை பேச்சுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் கொடுத்துள்ளார். திருச்சியில் நடந்த விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ‘நீங்க எல்லாம் ஆம்பிளையா..’ என ஓபிஎஸ்சிடம் கேட்டதாக கூறினார். இந்த பேச்சு சர்ச்சையானது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் ஜெயக்குமார் இதுபற்றி கூறுகையில், ‘எந்த ஆம்பளையும் மத்த ஆம்பளைகளை பாத்து நீ ஆம்பளையா..ஆம்பளையானு கேக்க மாட்டான். அதனாலதான் அவர் ஆம்பளையானு நான் கேட்கிறேன்’ என்று பேட்டியளித்தார். கண்டனங்கள் வலுக்கவே ஆடிட்டர் குருமூர்த்தி தனது சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்தார்.