சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில், கால் வைக்கும் மனிதன் பல்வேறு உடல் நலக் கோளாறுக்கு உள்ளாவான் என்று ஆராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். செவ்வாய்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 2035ம் ஆண்டளவில் செவ்வாயில் மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. மேலும், அங்கு ஒரு மனித காலனியை நிறுவவும் அது திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிக்கும் சூழல் வந்தால், அவர்களுக்கு படிபடியாக சுயநினைவை இழக்கும் நிலை ஏற்படும் என்றும், மனநோய் பாதிக்ககூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.