திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் நேற்று இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் ஒன்றியம் திருக்கோஷ்டியூரில் நேற்று இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை - திருப்புத்தூர் சாலையில் நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 24 ஜோடிகள் பங்கேற்றன. இதில் மதுரை பாண்டிகோவில் பாண்டியராஜனின் மாடு முதல் இடத்தையும், புதுக்கோட்டை கே.புதுப்பட்டி கவுசல்யாவின் மாடு 2ம் இடத்தையும், நகரம்பட்டி வைத்யாவின் மாடு 3ம் இடத்தையும், வேலங்குளம் கண்ணனின் மாடு 4ம் இடத்தையும் பிடித்தன.