சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஜெய்பூருக்கு கடந்த 19ம் தேதி மாலை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. பேசின்பிரிட்ஜ் இடையே மெதுவாக சென்றபோது 4 பேர் கும்பல் ரயிலில் ஏறி பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி ₹20 ஆயிரம், மோதிரம், 3 செல்போன் மற்றும் 2 பேரிடம் 6 சவரன் நகையை பறித்துக் கொண்டு அபாய சங்கிலியை இழுத்து தப்பி சென்றனர்.அதே நாளில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி சென்ற மின்சார ரயிலிலும் கொள்ளை நடந்துள்ளது. தண்டையார்பேட்டையில் ரயில் வந்தபோது கத்தியை காட்டி மிரட்டி பயணிகளிடம் செல்போன், ₹5000 பணத்தை 4 பேர் கும்பல் பறித்து சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.