கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்கு பின்னர் மேற்கு வங்கத்தில் நடைபெறும் முதல் தேர்தலாகும். மக்களவை தேர்தலில் 42 இடங்களில் பாஜ இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை காட்டிலும் 4 தொகுதிகள் மட்டுமே குறைவாக எடுத்திருந்தது. கரக்பூர் சதார் மற்றும் கரிம்பூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ.க்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியகன்ஞ் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழந்ததால் காலியானது.